×

அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஜன. 21: திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சகாயராஜு தெரிவித்ததாவது: கொரொனா காலத்திலும் பொதுமக்களுக்கு கடிதங்கள், பார்சல் வழங்குவது மட்டுமின்றி சேமிப்பு திட்டங்களில் முதன்மையாக தனது அனைத்து சேவைகளையும் அஞ்சல் துறை தங்குதடையின்றி வழங்கி வருகிறது. மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முடியாதவர்கள் சபரிமலை பிரசாதத்தை ரூ.450 மட்டும் தலைமை- துணை தபால் நிலையங்களில் முன் பணம் செலுத்தி தபால் வழியாக பெற்று கொள்ளலாம்.

மேலும் ஒரு சேவையாக அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டை திண்டுக்கல், நிலக்கோட்டை, பழநி ஆகிய தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இந்த அடையாள அட்டை கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் இதை பதிவு தபால் மூலம் பெற கூடுதலாக ரூ.22 செலுத்தி பெற்று கொள்ளலாம். இந்த அடையாள அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யவும் இந்த அஞ்சலக அடையாள அட்டையை எல்லா உயிர்க்கும் ஒரு சான்றாக பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ