×

வாட்டாள் நாகராஜனை கைது செய்யக்கோரி ஈரோட்டில் பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: தமிழக அரசின் பெயர் பலகையை சேதப்படுத்திய கன்னட அமைப்பு தலைவரை கைது செய்யக்கோரி ஈரோட்டில் பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    ஈரோடு தமிழக எல்லை பகுதியில் இருந்த தமிழக அரசின் பெயர் பலகையை கன்னட சலுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த சில நாட்கள் முன்பு உடைத்து சேதப்படுத்தினர். இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதில், ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கண குறிஞ்சி தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.   இதில், கன்னட சலுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சித்திக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : activists ,Periyar ,arrest ,Erode ,Vadal Nagarajan ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...