×

வைத்தியநாதபுரத்தில் ஓய்வு அரசு அதிகாரி வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை பணம், பொருட்களும் அபேஸ்

மதுரை, ஜன.20: ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் பெரியார் தெருவை சேர்ந்தவர் சிவநாதன்(65). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 13ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட ெசாந்த ஊரான சிங்கம்புணரி சென்றுவிட்டார். நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 23 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிவநாதன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags : jewelery ,government official ,house ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை