×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா

மதுரை, ஜன.20: வேளாண் திருத்த சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சோசியல் டெமாக்ரட்டிக் டிரேட் யூனியன் (எஸ்டிடியூ) சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.  மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் காலை துவங்கிய தர்ணா மாலை வரை நடந்தது. எஸ்டிடியூ மதுரை மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் யூசுப் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் அப்துல் சிக்கந்தர், அஜித் ரஹ்மான், எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் பேசினர். மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார். மதிமுக தொழிற்சங்க மாநில இணை பொதுச் செயலாளர் மகபூப்ஜான் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் கண்டன உரையாற்றினர்.

Tags : Delhi ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...