×

மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் திமுக மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

வாடிப்பட்டி, ஜன.20: செக்கானூரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க வேண்டும் திமுக மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். திமுக மதுரை மாவட்ட செயலாளர்கள் (வடக்கு) மூர்த்தி எம்எல்ஏ, (தெற்கு) மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கிராமம், கிராமமாக சென்று மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரையாற்றி வருகிறார். இக்கூட்டத்திற்கு பெண்கள் பெருமளவில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருமங்கலம் தொகுதி அ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கானூரணி கிராமத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரையாற்ற உள்ளார்.
 மாநாடு போல் நடைபெறவுள்ள மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக தலைவருக்கு திரண்டு வந்து இருவண்ண கொடியேந்தி மாபெரும் வரவேற்பு அளிக்க வேண்டும். வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : MK Stalin ,district secretaries ,DMK ,meeting ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...