×

துத்திக்குளம் ஊராட்சியில் திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி

சேந்தமங்கலம், ஜன.20: சேந்தமங்கலம் ஒன்றியம் துத்திக்குளம் ஊராட்சியில், திமுக சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் சுற்றுப்பகுதியில் இருந்து 30 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நடுகோம்பை அணி முதலிடமும், துத்திக்குளம் அணி 2ம் இடமும், இந்திரா காலனி அணி 3ம் இடமும், அண்ணாநகர் 4ம் இடமும் பெற்றது.பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.  
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா சின்னசாமி,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பெரியசாமி,இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி,ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்தபாபு, ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Cricket match ,DMK ,Tuticorin ,
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...