×

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் நகையை கண்டுபிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி, ஜன. 20:திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சம்பத்குமார்(42). இவர் கடந்த டிச.30ம்தேதி தனது தாய் இன்பமணியின்(75) உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அங்கே இன்பமணிக்கு ஸ்கேன் எடுக்கும்போது, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள அவரது 5 பவுன் நகையை தவறவிட்டுள்ளார். இதுகுறித்து சம்பத்குமார், தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில், எஸ்எஸ்ஐ நாகராஜ பாண்டியன், தலைமைக் காவலர் மோகன், காவலர் தர் ஆகியோர் அரசு மருத்துவமனை சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் ஒருவர் நகையை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கீழதட்டப்பாறை ஜோதிநகரைச் சேர்ந்த மாடசாமி மகன் ஊர்க்காவலன் (45) என்பவர் தனது மகனுக்கு உடல்நிலைக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வந்ததும், தவறவிட்ட நகையை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது. நேற்று எஸ்பி ஜெயக்குமார் தென்பாகம் காவல் நிலையத்தில் அதன் உரிமையாளரிடம் நகையை ஒப்படைத்தார். இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Tags : SP ,jewelery ,Thoothukudi ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்