×

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு சீரமைப்பு

தூத்துக்குடி, ஜன.20:தூத்துக்குடி பாத்திமாநகரில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை கீதாஜீவன் எம்எல்ஏ பார்வையிட்டு அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் கழிவுநீர் சென்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கீதாஜீவன் எம்எல்ஏ அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தனது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் உடனடியாக கழிவுநீர் அடைப்புகளை சரி செய்து, கழிவுநீர் சீராக செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் வீடுகளுக்குள் புகுந்துள்ள கழிவுநீரை லாரிகளின் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்ேகற்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...