×

மாவட்டத்தில் 69 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி.

கோவை, ஜன. 19:  கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாவட்டத்தில் புதியதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 691-ஆக உயர்ந்தது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 81 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 433-ஆக உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 595 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா காரணமாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 103 வயது முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 663-ஆக உள்ளது.

Tags : Corona ,district ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...