×

கத்தி காட்டி பணம் பறித்தவர் கைது

கோவை, ஜன.19: கோவையை சேர்ந்தவர் கெவின் (40). இவர் போத்தனூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரை வழி மறித்தார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து பணம் தர சொல்லி மிரட்டியுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அப்போது அந்த வாலிபர் கெவினின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பினார். இது தொடர்பாக கெவின் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த சுந்தராபுரம் முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த பிரவீண்குமார் (20) என்பவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்