×

விருதுநகரில் 3 நாட்களில் 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி

விருதுநகர், ஜன.19: விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவிற்கான 9720 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது. இந்நிலையில்  விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி அரசு மருத்துவமனை, குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையம், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய 7 மையங்களில் தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு மையத்திலும் தினசரி 100 பேர் வீதம் 700 பேருக்கு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜன.16 முதல் 18 (நேற்று) வரை விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 268 பேர், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 601 பேர் என மொத்தம் 869 பேர் கொரோனா தடுப்பூசியை போட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Corona ,Virudhunagar ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...