×

52 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்.

திருமங்கலம், ஜன.19:  திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையத்தில் அமைந்துள்ள சத்ய யுக சிருஷ்டி கோயிலில் 108 சன்னதிகள் அமைந்துள்ளன. 108 கோயில் எனப்படும் இந்த கோயிலில் 108 நாகதேவதைகள் உள்ளடங்கிய 52 நூதன கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை நடந்த கும்பாபிஷேகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களை கொண்ட சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவரான காலாதீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும், கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருமங்கலம், கள்ளிக்குடி, மதுரை, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு