×

முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிக்கு ராணுவ விருது

திருச்சி, ஜன. 19: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி கர்னல் கார்த்திகேஷுக்கு ராணுவவிருது வழங்கப்பட்டது. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரியாக கர்னல் கார்த்திகேஷ் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராணுவ தினத்தன்று ராணுவ விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் இவர் 3 ராணுவ விருதுகளை வாங்கி உள்ளார். 19 ஆண்டு பணிக்காலத்தில் நான்காவது தடவையாக ராணுவ விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ல் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் சிறப்பாக பணியாற்றியதற்காக துணிச்சல்மிகு விருது பெற்றார். மேலும் கருப்பு பூனைப்படை பிரிவிலும் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். மேலும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய ராணுவத்தால் தேர்வு செய்யப்பட்டு லெபனான், சிரியா நாடுகளில் பணியாற்றி உள்ளார். ராணுவ விருதுபெற்ற கார்த்திகேஷ் கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் பயின்றுள்ளார். ராணுவ விருது பெற்ற கார்த்திகேஷை துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் சிரிஸ்கரே பாராட்டினார்.

Tags : Security Officer ,Pongal Festival Gun Factory ,Retirement Home ,
× RELATED ரெட்டியார்சத்திரத்தில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்