×

திருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதியில் நாளை மின்தடை

திருச்செந்தூர், ஜன.19: திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர்(பொ) பாக்கியராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகநேரி உபமின் நிலையத்தில் அவசரகால மேம்பாட்டு பணி நாளை(20ம் தேதி)நடைபெற உள்ளது. இதனால் ஆறுமுகநேரி உபமின் நிலையம் சார்ந்து மின்னூட்டம் பெறும் ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்கள் மூலமாக மின் விநியோகம் பெறும் பகுதிகளான புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்ட ணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர் சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களுர் ஆகிய ஊர்களுக்கு நாளை(20ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruchendur ,Arumuganeri ,
× RELATED ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்