×

சிதிலமடைந்த நாசரேத்- குரும்பூர் சாலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நாசரேத், ஜன. 19: மழையால்  பழுதடைந்த நாசரேத்- குரும்பூர் சாலையை சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாசரேத்- குரும்பூர் இடையே உள்ள நாசரேத் பஸ் நிலைய சாலை,ரயில்வே ஸ்டேசன் சாலை மற்றும் பிரகாசபுரம், மூக்குப்பீறி, ஒய்யான்குடி, கச்சனாவிளை, நெய்விளை, புன்னைநகர், இடையன்விளை சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாகவும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் தொடர் மழையால் சாலை  சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த  நாசரேத்- குரும்பூர் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Public ,road ,Nazareth-Kurumpur ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி