×

சாத்தான்குளம் அருகே கல்லூரி பேராசிரியர், சகோதரி மீது தாக்குதல் தம்பதிக்கு வலை

சாத்தான்குளம், ஜன.19: சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது சகோதரி தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர் பூச்சிகாடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி மகன் இளையராஜா(35). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் சாமுவேல் என்பவரது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் நீர்கசிந்து இளையராஜா வீட்டில் வெளியேறியது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இளையராஜா அளித்த புகாரின பேரில் போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். போலீசில் புகார் செய்ததால் இளையராஜா மீது சாமுவேல் ஆத்திரம் அடைந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சாமுவேல், இளையராஜாவை அரிவாளால் தாக்க முயன்றார். அவர் தடுத்து விட்டதால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதுபோல் இளையராஜாவுக்கு ஆதரவாக அங்குவந்த அவரது சகோதரி ராதாவை, சாமுவேல் மற்றும் அவரது மனைவி முருகம்மாள் ஆகிய இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து தட்டார்மடம் போலீசில் இளையராஜா அளித்த  புகாரின் பேரில்  எஸ்.ஐ.அய்யப்பன் மற்றும் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட கணவன், மனைவியை தேடி வருகின்றனர்.

Tags : attack ,Sathankulam ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...