×

கூலித்தொழிலாளர் மர்மச்சாவு

வாழப்பாடி, ஜன. 19:  வாழப்பாடி அடுத்த பேளூர் அரசு கூட்டுறவு வங்கி அருகே வசிப்பவர் தமிழரசன்(45). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவரை, ஓராண்டுக்கு முன் மனைவி பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார். தமிழரசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று தமிழரசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. தகவலின் பேரில் வந்த வாழப்பாடி போலீசார், வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் தமிழரசன் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு