×

குடிநீர் இணைப்பு ஆலோசனை கூட்டம்

சேந்தமங்கலம்,  ஜன.19: புதுச்சத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில்,  குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற  தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துவேல் முன்னிலை  வகித்தார். இதில் பிடிஓ திவாகர் கலந்து கொண்டு  ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தில்  குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து பேசினார். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சீனிவாசன், வார்டு  உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்