×

காரைக்காலில் அரசு டாக்டர் வீட்டில் 15 பவுன் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

காரைக்கால், ஜன.19: காரைக்காலில் அரசு டாக்டர் வீட்டில் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் நேரு நகர், முல்லை வீதியில் வசித்து வருபவர் செல்வன் (50). இவர் நாகை மாவட்டம் திருக்கடையூர் அடுத்த ஆக்கூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று இரவு வீடு திரும்பிய டாக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 15 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து டாக்டர் செல்வன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடங்களை சேகரித்தனர். மேலும் எஸ்பி நிகாரிகாபட் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். டாக்டர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : robbery ,Government Doctor ,house ,Karaikal ,
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...