- திருப்பரங்குந்தரம் மலை
- மதுரை
- அய்கோர்ட் கிளை
- திருப்பரங்குன்ராம் மலை
- தர்கா
- தீபம்
- திருப்பரங்குணாரம் மலை
- உச்சிப்பிள்ளையார் கோவில்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடம் அருகே தர்கா உள்ளது. வழக்கமாக உச்சிபிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும். வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. மனுதாரரின் மனு பொதுநல வழக்குபோல் தீர்மானிக்கப்பட்டு தனிநீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட இயலாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் உள்ளதா என்பதே அடிப்படைக் கேள்வி என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
