×

விவசாயிகளுக்கு ஆதரவாக சிஎப்ஐ ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன. 17: விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மோடி அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் 1.50 கோடி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சியில் ரயில் மறியல் முயற்சி, முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : CPI ,demonstration ,
× RELATED கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டம்..!!