×

காணும் பொங்கலை முன்னிட்டு கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஜெயங்கொண்டம், ஜன.17:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் காணும் பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சுற்றுலாவாக வந்த காணும் பொங்கலை கொண்டாடி விடுமுறையை கழித்து செல்வது வழக்கமாக உள்ளது. அது போல இந்த ஆண்டு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பொதுமக்கள் வழிபட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோலீசார் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் அமர்ந்திருத்தல் உள்ளிட்டவைகளை தவிர்க்குமாறு கூறி எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அவர்களை வெளியே அனுப்பி வந்தனர்.மேலும் தொடர் மழையால் பிரகாரத்தில் வெளிப்புறங்களில் பொதுமக்கள் அமரக்கூடிய புல் தரைகளில் மழைநீர் தேங்கியும் கோயிலின் முகப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் சிறுவர்கள் பொதுமக்கள் அனைவரும் தண்ணீரில் காலை நனைத்து உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : devotees ,Gangaikonda Cholapuram Brihadeeswarar Temple ,eve ,Pongal ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...