×

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

ஜெயங்கொண்டம்,ஜன.17: ஆண்டிமடம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசார் ஜெயங்கொண்டம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பதிவு எண் இல்லாத டிராக்டர் ஒன்றில் ஓடை மண் எடுத்து சென்ற டிராக்டரை போலீசார் மறித்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆண்டிமடம் அருகே நெட்டலக்றிச்சி கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (42) என்பது தெரியவந்தது. இவர் உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்ததை அடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து ஜெயச்சந்திரன் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...