×

மழைக்கு நெற்பயிர்கள் முற்றிலும் சேதம்


ராஜபாளையம், ஜன. 17:  ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் கண்மாய் பாசனத்தில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் தொடர்மழையால் கண்மாய்கள் நிரம்பி வெளியேறும் நீர் வயல்களில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்தோம். தை மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தற்போது மழையில் சாய்ந்து முற்றிலும் சேதமாகியுள்ளது. எனவே தமிழக அரசு இப்பகுதியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...