×

ஞானதேசிகனுக்கு அஞ்சலி

கடத்தூர், ஜன.17:  தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் சென்னையில் இறந்தார். கடத்தூர் பேருந்து நிலையத்தில் அவரது உருவப்படத்திற்கு, தமாகா கிழக்கு மாவட்ட தலைவர் சாம்ராஜ் தலைமையில் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மகளிரணி தலைவி ராதிகா, சுதாகர், காளீஸ்வரன், சந்திரன், மதிசுதன் சுபாஷ், சந்திரபோஸ், சீனிவாசன், சக்திவேல், ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா