×

கல்லூரி மாணவரிடம் ₹66 ஆயிரம் பணம் திருட்டு


புதுச்சேரி, ஜன. 17:  புதுச்சேரி புதுசாரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன், ஆசிரியர். இவரது மகன் ராகுல்(20). காரைக்கால் என்ஐடியில் மெக்கானிக் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வரும் இவர், பொங்கல் விடுப்புக்காக வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்தன்று தனது கல்லூரி கட்டணத்தை வங்கியில் செலுத்துவதற்காக வீட்டில் இருந்து ரூ.66 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, பைக் பெட்டியில் வைத்துவிட்டு லாஸ்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் சாரம் வேலன் நகர் நடுத்தெருவில் வந்தபோது மற்றொரு பைக் அவர் மீது மோதியது. இதையடுத்து அந்த பைக்கில் இருந்த இறங்கிய 2 ஆசாமிகள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ராகுலின் பைக் பெட்டியை திறந்த ஆசாமிகளில் ஒருவர் அதிலிருந்த ரூ.66 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் ராகுல் புகார் அளித்தார். எஸ்ஐ திருமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து 2 ஆசாமிகளையும் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags : Theft ,college student ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...