அமைச்சர் கமலக்கண்ணன் பேசுகையில், புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளாக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். விவசாயிகளுக்கு நிதிஉதவி உரிய காலத்தில் தரப்பட வேண்டும். அதனை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாத ஐஏஎஸ் அதிகாரிகள் ஓரிரு மாதங்களில் ஓரளவுக்கு தமிழ் பேச கற்றுக் கொள்கின்றனர். ஆனால், புதுச்சேரியில் அப்படி இல்லை. மேலும், தமிழ் பேசும் ஐஏஎஸ் அதிகாரிகளை ஓரங்கட்டுவது, அவமானப்படுத்துவது இப்போது வழக்கமாகி விட்டது. இது மாற வேண்டும் என்றார்.