×

வீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்

துறையூர், ஜன. 13: துறையூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமாக மண்சுவரால் கட்டப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கணேசனின் வீட்டின் சுவர் இடிந்து அவரது வீடருகே வசிக்கும் நல்லப்ப ரெட்டியார் (80) என்பவர் மீது விழுந்தது. இதில் காயமடைந்த அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதேபோல் உப்பிலியபுரம் வடக்கு அம்பலக்கார தெருவில் வசிக்கும் பூசாரி மகள் கஸ்தூரியின் கூரை வீட்டு சுவரும், கோட்டப்பாளையம் மேற்கு பகுதியில் வசிக்கும் பெரியண்ணன் மகன் பெரியசாமியின் தகரக்கூரை வீட்டு மண்சுவரும் இடிந்து விழுந்தது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு