×

கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி

கோவில்பட்டி, ஜன. 13: கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலியானார்.கோவில்பட்டி அருகேயுள்ள துறையூரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பழனிச்சாமி(34). அதே ஊர் குருசாமி மகன் ஜெயராமன்(50). கூலித்தொழிலாளிகளான இருவரும் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக துறையூரிலிருந்து காமநாயக்கன்பட்டிக்கு பைக்கில் வந்தனர். பின்னர் அவர்கள், துறையூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை ஜெயராமன் ஓட்டினார். காமநாயக்கன்பட்டிக்கும், துறையூருக்கும் இடையே வரும்போது திடீரென பஞ்சரானதால் பைக் ஒரு பக்கமாக இழுக்கப்பட்டு இருவரும் நடுரோட்டில் கீழே விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெயராமன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயராமனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழனிசாமியின் உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் இறந்த பழனிசாமிக்கு நதியா(30) என்ற மனைவியும், கருப்பசாமி(11), பெருமாள்சாமி(10) ஆகிய மகன்களும் உள்ளனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bike accident ,Kovilpatti ,
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...