×

கனிமொழி எம்பி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி, ஜன. 13: தூத்துக்குடியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 பேர் கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின் ஏற்பாட்டில் குரூஸ்புரம், மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 50 பேர் திமுக பிரதிநிதி ராஜேந்திரன் தலைமையில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பேச்சாளர்கள் கரூர் முரளி, சரத்பாலா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அந்தோணி கண்ணன், வட்டச்செயலாளர் லாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : party ,DMK ,
× RELATED பாஜவின் ஏமாற்று வேலையை யாரும் நம்ப...