சங்கரன்கோவில், ஜன. 13: சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்டத் தலைவர் முருகன், நகரச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சங்கர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் திருமுருகன் சிறப்புரையாற்றினர்.
பறையர் இன மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும், சுதந்திர போராட்ட தியாகி தாத்தா இரட்டை மலை சீனிவாசனின் உருவபடத்தை சட்டமன்றத்தில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தென்காசி மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.