×

வாசுதேவநல்லூர், முக்கூடலில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

சிவகிரி, ஜன. 12: தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாசுதேவநல்லூரில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அருந்ததியர் காலனியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட பொறுப்பாளர் துரை தலைமையில் நடந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்துபாண்டி, ஷேக்தாவூது, நல்லசிவம், மாடசாமி, ரசூலா பாத்திமா, விவேகானந்தன், பரமகுரு, ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ ரசாக் முன்னிலை வகித்தனர்.  இதில் மாணவர் அணி துணை அமைப்பாளர் செரீப், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் மருதப்பன், துணை அமைப்பாளர் பொன்ராஜ், மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளரும் பேரூர் செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம், மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, விவசாயத் தொழிலாளர் மாவட்ட துணை அமைப்பாளர் மனோகரன், தொண்டர் அணி இசக்கி பாண்டியன், தகவல்தொழில்நுட்பபிரிவு சிவகுமார், மகளிர் அணி பூங்கொடி, கிருஷ்ணலீலா சீமான், காளியம்மாள், ஒன்றியச் செயலாளர்கள் வாசுதேவநல்லூர் வடக்கு பொன் முத்தையா பாண்டியன், தெற்கு பூசை பாண்டியன், சங்கரன்கோவில் லாலா சங்கர பாண்டியன், கடையநல்லூர் செல்லத்துரை, செங்கோட்டை ரவிசங்கர், புளியங்குடி நகரச் செயலாளர் ராஜகாந்த், பேரூர் செயலாளர்கள் வாசுதேவநல்லூர் சரவணன், ராயகிரி குருசாமி, ஆய்க்குடி சிதம்பரம் , சாம்பவர் வடகரை மாறன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கட்டபொம்மன், சந்திரன், விஜயகுமார், ரூபி பாலா, பேரூர் இளைஞரணி முனீஸ்வரன், குட்டியப்பன், சுருளிவேல், முருகன், திருப்பதி, சமுதாய தலைவர் காளியப்பன், செயலாளர் கணேசன், பொருளாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.    

Tags : Vasudevanallur ,Equality Pongal ,trio ,DMK ,
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு