×

மேட்டூர் அருகே 5 குடும்பத்தினர் தவிப்பு

மேட்டூர், ஜன.12:  மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி 3வது வார்டில் உள்ளது கருப்புரெட்டியூர் வண்டிகாரன்காடு. இப்பகுதியில் 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் பாதை விடப்பட்டிருந்தது. இங்கு வசிப்போர் பள்ளிக்கு செல்லவும், கடைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லவும் இப்பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பாதையை நில உரிமையாளர் விவசாயம் செய்ய முள் வைத்து அடைத்து விட்டார். கடந்த 8 வருடங்களாக இப்பாதையை பயன்படுத்தி வந்ததாகவும், தற்போது பாதை அடைக்கப்பட்டதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். நில உரிமையாளர் கூறும்போது தங்களது விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் வேறு பகுதியில் பாதை விட்டுள்ளதாகவும், பாதை அமைத்துகொள்ளாமல் தொடர்ந்து விவசாய நிலத்திலேயே பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் பாதையை அடைத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : families ,Mettur ,
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....