×

3 மாதங்களுக்கு முன்பு மாயமான எலக்ட்ரீஷியன் சடலமாக மீட்பு

உத்திரமேரூர்: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாயமான எலக்ட்ரீஷியன், வனப்பகுதியில் தூக்குகிட்டு சடலமாக கிடந்தார். அழுகிய நிலையில் சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர். உத்திரமேரூர் அடுத்த கிழக்காடி கிராமத்தை  சேர்ந்தவர் ரூபேஷ்குமார் (44). எலக்ட்ரிஷியன். இவருக்கு 2 மனைவி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென ரூபேஷ்குமார் மாயமானார். அவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.  புகாரின்படி சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூபேஷ்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், கிழக்காடி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள்,  அங்கு சென்று பார்த்தபோது, ஆண் சடலம் அழுகிய நிலையில் தூக்கில் தொடங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், 3 மாதத்துக்கு முன் மாயமான  ரூபேஷ்குமார் என தெரிந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Recovery ,electrician ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...