×

குளித்தலையில் பரபரப்பு க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி அனுமந்தராய பெருமாள் கோயிலில் ஜெயந்திவிழா

க.பரமத்தி, ஜன.12:க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் தார்சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பூஜையும் சிறப்பு நாட்களில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நாட்களான அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வணங்கி வருகின்றனர். நேற்று அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் செய்யப்பட்டு அனுமந்தராயசாமிக்கு, வெண்ணை சாத்து, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் அனுமந்தராயசாமி (ஆஞ்சநேயர்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம், செந்தூரம், வெற்றிலை, துளசி, வடை, லட்டு ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : festival ,Jayanthi ,Anumantharaya Perumal Temple ,Punnam Panchayat ,K. Paramathi Union ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...