×

பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜன.12:  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சமையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனாவை காரணம் காட்டி 11 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடிக்கிடக்கின்றன. தொற்று குறைவால் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் திறக்காததால் இடைநிறுத்தம் அதிகரித்து, குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இணைய கல்வி எப்போதும் நேரடி கல்விக்கு ஈடாகாது. பல லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப், ஸ்மாட் போன் இல்லை. மலைக்கிராமங்களில் மின்சாரம் இல்லாத நிலையில் ஆன்லை கல்வி மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.  பள்ளி, கல்லூரி, மாணவர் விடுதிகளை உடனே திறக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை, 2017-2018ல் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப் உடனே வழங்க கோரி கோஷம் எழுப்பி, மனு அளித்தனர்.

Tags : Demonstration ,schools ,student unions ,colleges ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...