×

காட்டுமாடுகள் முட்டி குதிரை பலி

கொடைக்கானல், ஜன. 12: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே செண்பகனூர் சிட்டி வியூ பகுதியை சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவர் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். நேற்று வீட்டருகே குதிரையை மேய்ச்சலுக்க விட்டிருந்தார். திடீரென குதிரையின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அங்கு முருகன் வந்து பார்த்த போது 5 காட்டு மாடுகள் குதிரையின் வயிற்றை கிழித்து குத்தி கொண்டிருந்தது. இதில் குதிரை சம்பவ இடத்திலே பலியானது. தொடர்ந்து காட்டு மாடுகள் அங்கிருந்து சென்றன. தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். செண்பகனூர் பகுதியில் காட்டுமாடுகள் அடிக்கடி நுழைந்து கால்நடைகளையும், பொதுமக்களையும் தாக்கி வருகின்றன. எனவே அவற்றை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு