×

உசிலம்பட்டி பகுதியில் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பு அதிர்ச்சியில் பெற்றோர்

உசிலம்பட்டி, ஜன.12:  உசிலம்பட்டி அருகேயுள்ள அல்லிகுண்டத்தை சேர்ந்தவர் வீரசிங்கம். தற்போது உசிலம்பட்டி மேலப்புதூரில் வசித்து வருகின்றார். இவரது மகன் சுபாஷ்(15), 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில் கடந்த நான்கு நாட்களில் 2 மாணவிகள், 2 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த தற்கொலைகளால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்ற ஆராய்ச்சியை விட, மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளியிலும், நகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும், மனவலிமைக்காண பயிற்சி வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Tags : Parents ,area ,Usilampatti ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...