×

வீடுகளில் கருப்புக்கொடி

அவனியாபுரம், ஜன.12:  அவனியாபுரம் செம் பூரணிரோட்டில் துக்க ராம் மருத்துவர் காலனி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மாநகராட்சிக்கு எதிர்ப்பை தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

Tags : homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை