×

வருவாய்துறை அலுவலர்கள் கூட்டம்

உசிலம்பட்டி, ஜன.12:  உசிலம்பட்டி, பேரையூர், வருவாய் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அலுவலர்களுக்கான கூட்டம், உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்டிஓ ராஜ்குமார் தலைமை, உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமை மற்றும் குறுவட்ட நில அளவையர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஆர்டிஓ ராஜ்குமார் கூறும்போது, பொதுமக்களின் தேவையான மனுக்களை நிலுவையில் வைக்காமல் உடனடியாக தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நில அளவை வரைபடங்களில் உள்ள புதிய, பழைய, பதிவுகளை, அடங்கலில் உள்ளபடி சரியாக உள்ளனவா என சரிபார்த்து, குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அது ஆவணங்களின் முறைப்படி சரி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

Tags : Meeting ,Revenue Officers ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...