×

கிராமத்தில் புகுந்த மலை பாம்பு

மேலூர், ஜன.12: மேலூர் அருகே கச்சிராயன்பட்டி ஊராட்சி கல்லம்பட்டியில் குடியிருப்பு பகுதியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்ததை அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் மூலமாக மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. வனத்துறையினர் 8 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்து சென்றனர். இதனையடுத்து பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை பாதுகாப்பு கருமலை வனப்பகுதியில் விடப்பட்டது. கிராமத்தில் மலைப்பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : village ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...