×

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

கோவை, ஜன. 12: கோவையில் அமைந்துள்ள கே.ஐ.டி.-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகை குறித்து பேசினார். கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பூக்களைக்கொண்டு வண்ணக் கோலங்கள் வரைந்தும், பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக மாணவ, மாணவிகள் வேட்டி, சேலை அணிந்தும் பொங்கல் விழா கொண்டாடினர். நிகழ்ச்சியில் கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் முனைவர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் முனைவர் ரமேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : celebration ,Artist Karunanidhi Technical College ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்