×

108 ஆம்புலன்ஸ் நேர்முக தேர்வு

ஈரோடு, ஜன. 12: ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, நேர்காணல், சான்று சரி பார்ப்பு ஆகியவை நேற்று நடைபெற்றது. மண்டல மேலாளர் குமரன், மாவட்ட மேலாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில், தேர்வுகள் நடந்தது. மாநில அளவில் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான தேர்வில் 700 பேர் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, சான்று சரி பார்ப்பு, உடற்கூறு தேர்வுக்குப்பின் 200 பேர் வரை தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தேர்ச்சி சான்று வழங்கப்பட்டு சென்னையில் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர். பயிற்சிக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு