×

மது போதையில் பெண் தீக்குளிப்பு

பெரம்பூர்: கொடு ங்கையூர், சந்திரசேகர் நகர், 2வது தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜானகி (52), குப்பை பொறுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனர். ஜானகிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்  இரவு குடித்துவிட்டு வீட்டில் தனது கணவருடன் சண்டை போட்டுள்ளார். இதை மகள் மற்றும் மகன்கள் கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஜானகி, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 83 சதவீத தீக்காயங்களுடன் ஜானகி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி கொடுங்கையூர்  போலீசார் விசாரிக்கின்றனர். …

The post மது போதையில் பெண் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Rajendran ,Janaki ,2nd Street, Kodu Ngaiyur, Chandrasekhar Nagar ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு