×

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருச்செங்கோடு, ஜன.11:  திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தொழிலாளர் நலத்துறை சார்பில், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் மெகராஜ் கலந்துகொண்டு 3,877 ஆண்கள், 6,410 பெண்கள் என  மொத்தம் 10 ஆயிரத்து 287 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். சமூக இடைவெளியுடன் தொழிலாளர்களை வரிசையில் வரச்சொல்லி பொங்கல் தொகுப்பை வழங்குமாறும், பணிகளை விரைந்து முடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : construction workers ,
× RELATED பாஜவின் ஏமாற்று வேலையை யாரும் நம்ப...