×

கடையில் குளிர்பானம் குடித்த 2 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த 2 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்படுகிறது.  புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசா அலி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் லட்சுமண சாய் (6) என்ற மகன் உள்ளனர். செந்தில்குமாருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்க்க அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரின் தங்கை, தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.இந்நிலையில், செந்தில்குமாரின் மகன் லட்சுமண சாய், மற்றும் செந்தில்குமாரின் தங்கை மகன் ஓமேஸ்வர் (8) ஆகியோர், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அதில், குளிர்பானம் காலாவதி ஆகவில்லை என்பதும், இந்த குளிர்பானம் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு சென்னையில் விற்பனை செய்யப்படுவதும் தெரிந்தது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கடையில் குளிர்பானம் குடித்த 2 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Puduvannarpettai ,Stanley Government Hospital ,
× RELATED போக்சோ வழக்கில்...