×

₹39 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்

காரிமங்கலம், ஜன.11: காரிமங்கலம் ஒன்றியம், மாட்லாம்பட்டியில், மாநில நெடுஞ்சாலையில் ₹39.20 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். ஆர்டிஓ தணிகாசலம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன், யூனியன் சேர்மன் சாந்தி பெரியண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் அன்பழகன், பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் காவேரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேந்திரன், கவிதா நாகராஜன், பிடிஓக்கள் மீனா, மணிவண்ணன், உதவி கோட்ட பொறியாளர் ராஜகாந்தன், தாசில்தார் கலைச்செல்வி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஜெயபிரகாஷ், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,
× RELATED சபரிமலை சீசன் தொடக்கம்...