×

கோவில்பட்டி அருகே பாதயாத்திரை பக்தர் வாகனம் மோதி பலி

கோவில்பட்டி, ஜன. 11:  கோவில்பட்டி  அருகே திருவேங்கடம் அடுத்த ஏ.கரிசல்குளம், அண்ணாநகரை சேர்ந்தவர்  ராமகிருஷ்ணன் (66). விவசாயி. இவரது மனைவி வீரலட்சுமி (55). தம்பதியின் மகன் கேசவன் (30). இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமகிருஷ்ணனும், இவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த  சுப்பிரமணியன் (60) என்பவரும் புனித மாலை அணிந்து,  விரதம் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். நேற்று  அதிகாலை கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் சென்றபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த வாகனம், இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் ராமகிருஷ்ணன் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் கோவில்பட்டி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர்  ஐயப்பன் விசாரித்து வருகிறார்.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!