×

2 இளம்பெண்கள் மாயம்

நெல்லை, ஜன.11: பாளை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் மகாலட்சுமி (24). இவர் தனியார் மில்லில் பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கோமதி அளித்த புகாரின் பேரில் பாளை போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர். இதுபோல் மேலப்பாளையம் பாரதியார் புரத்தைச் சேர்ந்தவர் சுடலை மகள் தமிழ்செல்வி (20). இவர் கடந்த 8ம் தேதி கோயிலுக்கு செல்வதாகக் கூறி விட்டு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...