×

கொட்டும் மழையில் முருகபக்தர்கள் பாதயாத்திரை

நெல்லை, ஜன. 11: தைப்பொங்கல் திருவிழா மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களாக முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று நெல்லை மாநகர் வழியாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருகபக்தர்கள் சாரைசாலையாக நடந்து சென்றனர். நேற்று அதிகாலையிலும் பிற்பகல் 3 மணியில் இருந்தும் நெல்லையில் தொடர்ந்துகனமழை பெய்தது. இதை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி பக்தர்கள் சென்றனர். மேலும் பலர் முருகன் படத்துடன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தி பாடல் இசைத்து ஆடிப்பாடியபடி சென்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ